Wednesday, January 27, 2016

மாப்பிள்ளைச் சம்பா - சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை

மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு நெல் ரகம்... இந்த அரிசியை சாப்பிட்டால் சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை!
தமிழகத்தில் வழக்கொழிந்து போன 10 ஆயிரம் பாரம்பரிய நெல் ரகங்கள்.
‘‘ஒசுவக்குத்தாலை, சிவப்புக்குடவாழை, வெள்ளையான், குருவிகார், கல்லுருண்டை, சிவப்பு கவுணி, கருடன் சம்பா, வரப்புக் குடைஞ்சான், குழியடிச்சம்பா, பனங்காட்டுக் குடவாழை, நவரா, காட்டுயானம், சிறுமணி, கரிமுண்டு, ஒட்டடையான், சூரக்குறுவை... இதெல்லாம் நம்ம பாரம்பரிய நெல் ரகங்கள். இந்த மாதிரி ஆயிரக்கணக்கான ரகங்களை பிலிப்பைன்ஸுக்கும், அமெரிக்காவுக்கும் கொண்டு போயிட்டாங்க. இன்னைக்கு உள்ள விவசாயிகளுக்கு இதோட அருமையெல்லாம் தெரியாது. ஒவ்வொரு நெல்லும் ஒவ்வொரு மருந்து. மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு ரகம்... சாப்பிட்டா சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை! கவுணி அரிசி நாள்பட்ட புண்ணையெல்லாம் ஆத்திடும். கருங்குறுவை, யானைக்காலை குணமாக்கும். பால்குடவாழையில சமைச்சுச் சாப்பிட்டா குழந்தை பெத்த பெண்களுக்கு பால் நல்லா ஊறும். தங்கச்சம்பாவை தங்க பஸ்பம்னே சொல்வாங்க.
புயல், மழை, வெள்ளம், வறட்சி எல்லாத்தையும் தாங்கி வளர்ற ரகங்கள் ஏராளம் இருக்கு. விதைச்சு விட்டுட்டா அறுவடைக்குப் போனா போதும். கடற்கரையோர உப்புநிலத்துக்கு ஒசுவக்குத்தாலை, சிவப்புக்குடவாழை, பனங்காட்டுக் குடவாழை. மானாவாரி நிலங்கள்ல குறுவைக் களஞ்சியத்தையும், குருவிக்காரையையும் போட்டா காடு நிறையும். காட்டுப்பொன்னியை தென்னை, வாழைக்கு ஊடுபயிரா போடலாம். வறட்சியான நிலங்களுக்கு காட்டுயானம், தண்ணி நிக்கிற பகுதிகளுக்கு சூரக்குறுவை, இலுப்பைப்பூ சம்பா... இப்படி நுணுக்கம் பார்த்துப் போடணும். வரப்புக்குடைஞ்சான்னு ஒரு ரகம்... ஒரு செலவும் இல்லை. விளைஞ்சு நின்னா வரப்பு மறைஞ்சு போகும். இதையெல்லாம் இன்னைக்கு இழந்துட்டு நிக்கிறோம்.
விவசாயம் நசிஞ்சதுக்கு காவிரிப்பிரச்னை மட்டும்தான் காரணம்னு சொல்றாங்க. அது உண்மையில்லை. விவசாயிகளோட மனோபாவமும் காரணம். எந்த மண்ணுக்கு எந்த நெல்லைப் போடணும், எப்போ போடணும்னு கணக்குகள் இருக்கு. அதை எல்லாரும் மறந்துட்டாங்க.. புது தொழில்நுட்பம்னு சொல்லி நிலத்தை நாசமாக்கிட்டாங்க. நம்ம இயற்கை விவசாயத்தை அழிச்சு, உரத்தையும் பூச்சிமருந்தையும் நம்ம மண்ணுல கொட்டுன நாடுகள், இப்போ இயற்கை விவசாயம் பண்றாங்க. உலகத்துக்கே கத்துக்கொடுத்த நாம தொழில்நுட்பத்தைக் கடன் வாங்குறோம்.
திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள கட்டிமேட்டில், பழமையான ஆதிரெங்கன் கோயிலை ஒட்டியிருக்கிறது ஜெயராமனின் குடில். குடிலைச் சுற்றிலும் பச்சைப் பசேலென உடல் விரித்துக் கிடக்கிறது வயற்காடு. தழைத்து நிற்கிற அத்தனையும் பாரம்பரிய ரகங்கள்.
இவர் ஒரு நாடோடியைப் போல அலைந்து திரிகிறார் ஜெயராமன். வயற்காடுகளையும், விவசாயிகளையும் தேடி அவரது பயணம் நீண்டுகொண்டே இருக்கிறது. தமிழகத்தில் வழக்கொழிந்து போன 10 ஆயிரம் பாரம்பரிய நெல் ரகங்களையும் மீட்டு, தமிழக விவசாயத்தை மறுமலர்ச்சி அடையச் செய்வதுதான் அவரது இலக்கு.
படித்தது பத்தாம் வகுப்புதான். ஆனால் ஒரு பேராசிரியரின் தெளிவோடு விவசாயமும், விஞ்ஞானமும் பேசுகிறார். பாரம்பரிய நெல் சாகுபடி பற்றி பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பயிற்சி அளிப்பதோடு, விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைகளை இலவசமாகவும் வழங்குகிறார். வழக்கொழிந்து போன 63 நெல் ரகங்களை மீட்டு, வயற்காட்டுக்கு கொண்டு வந்த இவர், ‘விதை வங்கி’ ஒன்றையும் நடத்துகிறார்.
அரசாங்கம் ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய ஏக்கருக்கு 30 கிலோ விதையைப் பரிந்துரைக்கிறது. ஆனால் ஜெயராமன் வெறும் 240 கிராம் போதும் என்கிறார்.
‘‘ஒவ்வொரு வருஷமும் மே மாதம் கடைசி சனி, ஞாயிறுகள்ல எங்க குடிலுக்குப் பக்கத்தில நெல் திருவிழா நடக்கும். நெல் உற்பத்தி முதல் விற்பனை வரை உள்ள பிரச்னைகள் பத்தி விவாதிப்போம். பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி பண்ற பயிற்சிகளும் தருவோம். நிகழ்ச்சியோட இறுதியில, ஒரு விவசாயிக்கு ரெண்டு கிலோ வீதம் பாரம்பரிய விதைகளைக் கொடுப்போம். ஒரே ஒரு கண்டிஷன். 2 கிலோ விதையை வாங்கிட்டுப் போறவங்க, அதை சாகுபடி பண்ணி அடுத்த வருஷம் நாலு கிலோவா தரணும். இந்த வருஷம் நடந்த நெல் திருவிழாவுல 1860 விவசாயிகளுக்கு விதை கொடுத்திருக்கோம்’’ என வியக்க வைக்கிறார் ஜெயராமன்.

Thursday, December 17, 2015

பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை


தேவையான பொருட்கள்
பச்சை பசுஞ்சாணம் 5 லிட்டர்
பசுமாட்டு கோமியம் 4 லிட்டர்
பசும்பால் 3 லிட்டர்
நன்கு புளித்த தயிர் 2 லிட்டர்
பசுமாட்டு நெய் அரை லிட்டர்
இளநீர் 2
வாழைப்பழம் 12
சிறிதளவு சுண்ணாம்பு
நம்முடைய நிலத்தின் மண் கொஞ்சம்
நாட்டுச் சர்க்கரை அரைக்கிலோ
பச்சை பசு சாணி 5 கிலோவுடன், பசு மாட்டு நெய் அரை லிட்டரை கலந்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் 3 நாட்கள் வைக்கவும். தினம் ஒரு முறை இதை பிசைந்து விடவும்.
நான்காவது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை ஒரு வாயகன்ற மண்பானை, சிமெண்டுத் தொட்டி அல்லது டிரமில் போட்டுக் கையால் நன்கு கரைத்து, கலக்கி, கம்பி வலையால் வாயை மூடி நிழலில் வைக்கவும். தினம் இருவேளை காலை, மாலை பலமுறை நன்கு கலக்கி விடவும். அதிகம் கலக்கினால் கலவைக்கு அதிகக் காற்றோட்டம் ஏற்பட்டு நுண்ணுயிர்கள் அபரிவிதமாகப் பெருகி மிகுந்த பலன் கொடுக்கும்.
இப்படி 20 நாட்கள் கலக்கி வந்தால் பஞ்சகவ்யா கரைசல் தயாராகி விடும். இதை ஆறு மாதம் வரை தினமும் கலக்கி விட்டு, கெடாமல் வைத்துப் பயன்படுத்தலாம். தண்ணீர் குறைந்து கலவை கெட்டியானால் மீண்டும் போதிய அளவு தண்ணீர் சேர்த்து கலக்கினால் கலவைக்கு அதிக பலன் உண்டு.
30- 50 லிட்டர் நீரில் பஞ்சகவ்யா கலவையில் ஒரு லிட்டர் சேர்க்கலாம். பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், நிலத்தில் தண்ணீர் பாயும் நேரமும் ஊற்ற வேண்டும்
இவற்றை 50 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து தொழுவுரத்தில் ஊற்றி மதிப்பூட்டல் செய்து பயிருக்கு போடலாம். நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு பயிர் வளர்சி நன்றாக இருக்கும்.
இவற்றை பயிருக்கு 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்ற விகிதத்தில் அடித்தால் பூச்சி நோய் தாக்கம் இருக்காது.
பஞ்சகவ்யத்தில் உள்ள சத்துக்கள்
பசும்சாணம் -பக்டீரியா, பூஞ்சாணம், நுண்ணுயிர் சத்துக்கள்
கோமியம்(யூரின்)- பயிர் வளர்ச்சிக்கு தேவையான (நைட்ரஜன்) தழைச்சத்துக்கள்
பால் – புரதம்,கொழுப்பு, மாவு அமினோஅமிலம், கால்சியம் சத்துக்கள்
தயிர் -ஜீரணிக்கத்தக்க செரிமானத் தன்மையை தரவல்ல நுண்ணுயிரிகள் (லேக்டோபேஸில்லஸ்)
நெய் – விட்டமின்-A, -விட்டமின் B, கல்சியம், கொழுப்புகள்
இளநீர் – சைட்டோசைனின் எனும் வளர்ச்சி ஊக்கி மற்றும் அனைத்து வகை தாதுக்கள் (மினரல்ஸ்)
வாழைப்பழம் நொதிப்புநிலை தரவல்லதாகும். அதிக நுண்ணூட்டம் பெறுகின்றது
பஞ்சகவ்யத்தில் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் மிகமிக அதிகமாகவும் அந்த நுண்ணுயிர்கள் அதிக ஆற்றலுடனும் உள்ளது. பஞ்சகவ்ய தழைச்சத்தை நிலைநிறுத்தும் அசோஸ்பைரில்லம் பத்து கோடி உள்ளது தழைச்சத்தை நிலைநிறுத்தும் அசடோபேக்டர் பல லட்சக்கணக்கில் உள்ளது மணிச்சத்தைக் கரைத்துக் கொடுக்கக்கூடிய பாஸ்போபேக்டீரியா ஐந்து கோடிக்கும் அதிகமாக உள்ளது. நோய் எதிர்ப்பாற்றலைத் தரும் சூடோமோனஸ் ஆறு கோடிக்கு மேல் உள்ளது
பயிர்கள் வளர்வதற்குத் தேவையான் 13 வகையான பேரூட்ட, நுண்ணூட்டச் சத்துக்களும் தேவையான அளவில் உள்ளன. எனவே, எல்லா வகையான பயிர்களுக்கும் தாராளமாகப் பயன்படுத்தலாம்.
மா
பூ பூக்கும் காலத்தில் மரத்தில் உள்ள எல்லா இலைகளையும் மறைக்கிற மாதிரி பூ பூக்கும். எவ்வளவு காற்று அடித்தாலும் பூ கொட்டாது. பூ பூத்து, நிறைய பிஞ்சுகள் விடும். பிஞ்சுகள் நன்கு காய்த்து, நல்ல விளைச்சலைக் கொடுக்கும். மாவைப் பொறுத்தவரை ஒரு ஆண்டு அதிக விளைச்சல் தந்தால், அடுத்த ஆண்டு விளைச்சல் சரியாக இருக்காது என்பார்கள். பஞ்சகவ்யத்தைத் தெளித்தால் இந்தப் பிரச்னைகளுக்கு எளிதில் முடிவு கட்டிவிடலாம்.
எலுமிச்சை
எலுமிச்சை செடிகளுக்கு பஞ்சகவ்யத்தை ஊற்றினால், ஆண்டு முழுக்க பூக்களும் பிஞ்சுகளும் பழங்களும் மரத்தில் தொங்கிக் கொண்டே இருக்கும். விளைச்சல் பெருகுவதோடு பழங்கள் நல்ல நிறத்துடன் அதிக நாட்கள் புத்தம் புதிசாக இருக்கும் பஞ்சகவ்யத்தில் வளரும் எலுமிச்சையில் சாறு அதிகம். ஊறுகாய்க்கு பிரமாதமாக இருக்கும்.
முருங்கை
முருங்கை மரத்துக்கு பஞ்சகவ்யத்தைத் தெளித்தால் நிறைய பூ பூத்துக் குலுங்கும்.
கொய்யா, சப்போட்டா, நெல்லி, புளி, வாழை, கரும்பு, மல்லிகை, கத்தரி, தென்னை, நிலக்கடலை, எள், எல்லா வகையான பயிர்களுக்கும் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

அமிர்த கரைசல்

அமிர்த கரைசல்
பச்சை பசுஞ்சாணம் -10kg
பசுவின் கோமியம் -10லிட்
நாட்டு சர்க்கரை -250g
தண்ணீர் -100lit


இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக் கலக்கி ஒரு நாள் வைத்திருந்தால் அடுத்த நாளே இந்த கரைசல் தயாராகி விடும்.இதை 10% கரைசலாக பாசன நீருடன் கலந்து விடலாம்.அல்லது தெளிப்பு உரமாகவும் பயன்படுத்தலாம்.பாசன நீருடன் கலந்து விட ஏக்கருக்கு 50லிட்டர் தேவைப்படும்.தெளிப்பு உரமாகவும் பயன்படுத்த 10லிட்டர் போதும்.இது மண்ணின் வளம் மற்றும் நலத்தையும் கூட்டி பயிர்கள அனைத்திற்கும் நன்மை பயக்கும்.


பிரம்மாஸ்திரா
மூன்று கிலோ அளவிலான வேப்பங்குச்சிகளை விழுதாக அரைக்கவேண்டும். இதனுடன் சீத்தா, புங்கன், ஆமணக்கு, பப்பாளி, கொய்யா, ஊமத்தை, கருவேலம், பாகல் ஆகியவற்றின் இலைகளை தலா இரண்டு கிலோ வீதம் சேர்த்து அரைக்கவேண்டும் (ஏதாவது ஐந்து இலைகள் இருந்தால் கூட போதும். இலைகளை அப்படியே போட்டால், பிரம்மாஸ்திரம் தயாராவதற்கு நாள் பிடிக்கும்). இவற்றைப் பத்து லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கலந்து அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு 48 மணி நேரம் குளிர வைத்து, வடிகட்டி, பயிர்களுக்கு தெளிக்கலாம். இந்தக் கரைசலை ஆறு மாதம் வரை சேமித்து வைத்திருக்கலாம்.

அக்னி அஸ்திரம்
புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.

சுக்கு அஸ்திரா
சுக்குத் தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். பின்பு குளிர வைக்கவும். பசு அல்லது எருமைப் பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரம் தவிர்த்த பிற பாத்திரங்களில் கொதிக்க வைக்கவும். படிந்திருக்கும் ஆடையை எடுத்து விடவும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றைக் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். இது சிறந்த பூஞ்சானக் கொல்லியாகும். இதை 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.

பீஜாமிர்தம்
தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டுச் சாணம் 5 கிலோ, கோமியம் 5 லிட்டர், நல்ல நுண்ணுயிரிகள் இருக்கும் மண் ஒரு கைப்பிடி அளவு. இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊறவிட வேண்டும். இதுதான் பீஜாமிர்தம். அதன் பிறகு சுத்தமானச் சுண்ணாம்பு 50 கிராம் போட்டு அதைக் கலக்கவேண்டும். அதன்பிறகே விதையை அந்தக் கரைசலில் நனையவிட்டு, விதைக்கவேண்டும். கரைசலில் சுமார் 2 மணிநேரம் விதைகளை நனையவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் வேர் அழுகல், வேர்க் கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படுகின்றன.

ஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து இதைக் கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. பாசன நீரிலேயே கலந்து விடலாம்.

கனஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதை எல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள் கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு கோமியத்தைக் கலந்தால் போதும்.

நீம் அஸ்திரா
நாட்டுமாட்டுச் சாணம் இரண்டு கிலோ, நாட்டுமாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வேப்பங்குச்சிகள் மற்றும் இலை 10 கிலோ இவற்றை பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடக்கூடாது. இதை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவைக் கலக்கிவிடவேண்டும். பின்பு வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம்.

மீன் அமினோ அமிலம்
‘மீன் அமிலம்’ தயாரிப்பது மிகவும் எளிது. மீன் விற்கும் இடத்தில் அல்லது நறுக்கும் இடத்தில் மீதப்படும் செதில், குடல், வால், தலை போன்றவைகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து… நன்கு பிசைந்து… ஒரு பிளாஸ்டிக் வாளிக்குள் மூடி வைக்கவேண்டும். இருப்பத்தைந்து நாள் கழித்து, எடுத்து நன்கு கலக்கினால் டானிக் தயார். இந்த வளர்ச்சி ஊக்கியே ‘மீன் அமிலம்’. 10 லிட்டர் நீருக்கு 100 கிராம் (மில்லி) கலந்து பயிரில் தெளித்தால், பயிர் பச்சை கொடுத்து செழித்து வளர்கிறது

Friday, August 28, 2015

நேந்திரம்பழ பாயசம்


தேவையானவை:
நேந்திரம்பழம்-2
வெல்லம்-250கிராம்
தேங்காய்-1
ஏக்காய்த்தூள்-1டீஸ்பூன்
முந்திரிபருப்பு-20
நெய்-தேவைக்கு

 செய்முறை:

நேந்திரம்பழத்தை வெட்டி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
அதை நெய் விட்டு மிதமான தீயில் அடிப்பிடிக்காமல் கிளறி வதக்கவும்.
வெல்லத்தை சிறிது நீர் விட்டு காய்ச்சி கரைந்ததும் வடிகட்டவும்.
தேங்காயில் முதல்,இரண்டாம் தேங்காய்ப்பால் எடுக்கவும்.
இரண்டாம்பால் ஊற்றிசூடாக்கி நேந்திரம்பழத்துண்டுகளை அதில் போட்டு மிதமான தீயில் வேகவிடவும். அவ்வப்போது அடிபிடிக்காமல் கிளறிவிடவும்.
பழத்துண்டுகள் வெந்தபின் வெல்லப்பாகை ஊற்றி நெய்யில் வறுத்த முந்திரி ,ஏலக்காய்ப்பொடி சேர்க்கவும். நல்ல வாசனையுடன் பாயாசம் பக்குவம் ஆனதும் முதல் தேங்காய்ப்பாலை ஊற்றி கிளறி ஒரு நிமிடம் மூடி வைக்கவும்.

குறிப்பு: சேர நாட்டில் அடிக்கடி செய்யப்படும் இந்த பாயாசத்தில் நேந்திரம் பழம் போடுவது வழக்கம்.அது கிடைக்காவிட்டால் அதற்கு பதில் நன்றாக கனிந்த ரஸ்தாளி வாழைப்பழத்திலும் செய்யலாம்.தேவைப்பட்டால் பச்சை கற்பூரம் சிறிது வாசனைக்காய் சேர்த்துகொள்ளலாம்

Monday, April 7, 2014

‘‘தேவையில்லாத ஆசை அதிகமாயிடுச்சு...!’’















‘‘தேவையில்லாத ஆசை அதிகமாயிடுச்சு...!’’

முதலில் நமக்கு டீசலைக் கொடுத்தான்.

எதுக்குன்னா

 டிராக்டர்ல ஊத்து;
மோட்டார் போட்டு தண்ணி எடு;
தானியம் பெருகும்”னு சொன்னான்.

இப்ப தானியத்தைக் கொடுன்னு நம்மட்ட கேட்கிறான்.

 எதுக்குன்னா டீசல் தயார் பண்ணவாம். இதுக்கா உழைக்கிறோம்? வெளிநாட்டுப் பொருளை நம்பி மேலும் அந்த கருவிகளை கொண்டு நிலத்தையே கெட்டியாக்கிட்டோம்.

சோளம், கம்பு, தினை போன்ற தானியங்களை பயிர் செய்து சாப்பிட்டு நன்றாக இருந்தோம். ஆனால், இன்று விளையும் மக்காச்சோளம் பாதி கோழிக்கும், பன்னிக்கும், மாட்டுக்கும் தீவனமா போகுது. 

நாம கோழியத் தின்னா சத்துன்னு நினைக்கிறோம். எதை எதையோ நாம ஆசைப்பட ஆரம்பிச்சுட்டோம். 

அமெரிக்கா போக ஆசை, 

நிலாவுக்கு போக ஆசைன்னு தேவையில்லாத ஆசை அதிகமாயிடுச்சு...!

-‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ .கோ.நம்மாழ்வார்

Tuesday, February 25, 2014

இயற்கை அங்காடி - organic stores








Green Organics No: 30,
MCK Nagar, Adayalampattu,
Nolambur West,
Near 200 feet
Chennai By Pass Service Road,
Chennai – 600037 Tamilnadu – India
Phone : +91- 32925454 Mobile: +91-9444014096, 9994287060 email : organicfoodexports@gmail.com

சோழர் இயற்கை உணவு பொருள் அங்காடி
M.Chelliah,
No.27,Infant jesus church complex,
Thanjavur (Tanjore),
India 613 005
096 29 688492

Tirupur Shop
Online Organic Shop
12, SV Colony, Extension 3rd Street,
PN Road,
Tirupur - 641602
http://tirupurshop.com


விதை இயற்கை அங்காடி (Vidhai Organic Store)
a thamizhstudio network…..
இடம்: # 1, ஸ்ருதி அபார்ட்மென்ட்ஸ்,
காந்தி நகர்,
முதல் குறுக்கு தெரு,
அடையார், (அடையார் சிக்னல் அருகில்),
(அண்ணா பல்கலைக் கழகத்திலிருந்து வரும்போது அடையார் மேம்பாலம் (மேலே ஏறக்கூடாது), அருகில் உள்ள சிக்னலில் இருந்து இடது புறம் திரும்ப வேண்டும். அங்கிருந்து 10 மீட்டர் தூரத்தில் விதை கடையின் பெயர்பலகை தெரியும்).





மகா இயற்கை அங்காடி,
8, போஜகாரத் தெரு (ரிஜிஸ்டர் ஆபீஸ் அருகில்),
வாலாஜாபாத்-631605.

http://cms.vidhaiorganicstore.com/contactus_tamil.htm

 

Pasumai Organic & Naturals
26/10, Dhandeshwaram main road, 
Velacheri, Chennai - 42.
Phone: 9840 902 284,
admin@pasumaiorganic.com 
 http://pasumaiorganic.com



OTR Organic Farm Products
6,  Alagesan Main Road Number 2,
S.R.P Nagar,  Saibaba Colony,
Coimbatore- 641 011
Email: fresh@OTRFarms.com
Mobile: 97912 11979, 99946 63550, 99441 48277


DHANYAM organic superstore
No. 24, north boag road, T. Nagar, chennai - 17
Phone: 044-28157654
(organic rice, dal, cold-pressed oils, essential oils. milk, cheese, butter, ghee, vegetables, juices etc)
www.dhanyam.in

Restore
150/3,East Coast Road, Sangam Colony,
Kottivakkam,chennai,Tamil Nadu,600041
044 2492 1093
(organic groceries, fresh produce, milk products, organic clothing etc)
www.restore.org.in

Restore Organic
# 27/10, II Main Road, Kasturba Nagar, Adyar
Chennai, Tamil Nadu
094 44 166779

Bon Appétit
The Organic & Health Food Shop
2/16, Ambour Salai,
Puducherry - 605 001, India

Nalam
No: 167, Kamachiyamman Koil St,
Pondicherry, Pondicherry HO, PONDICHERRY - 605001

Green store
No 30/2 Dr Cm Complex, Behind Ganesh Temple,
Block 1st Avenue, Anna Nagar East,
Chennai - 600102

 
Naturagros
Address: 14/1-A, Vasantha Press Road,
Arunachalpuram, Adyar,
Chennai
Phone: 91 44 55850082

Magic Monkey
Address
Tirugnanasambandham Road,
Race Course,
Coimbatore – 641 018

Golden Jubilee Biotech Park For Women Society
Address: Sipcot IT Park,
Old Mahabailuram Road,
Kanchipuram - 603 103 







Wednesday, October 23, 2013

இயற்கை விவசாயம் இலவச ஆலோசனை

நண்பர்களே வணக்கம்,


இயற்கை உயிர் உரங்கள்,
பயிர் வளர்ச்சி ஊக்கிகள்,
விளக்கு பொறி,
இயற்கை பூச்சிகொல்லிகள்,
மலர்கள் அதிகம் பூக்க இயற்கை ஊக்கி ஆகியவை 

குறைந்த விலையில் கிடைக்கும். மேலும் 

வீடு தோட்டம் அமைக்க இயற்கை முறையில் விவசாயம் செய்ய அடியுரம் முதல் அறுவடை வரை இலவச ஆலோசனை வழங்கப்படும்
தொடர்புக்கு

ராஜராஜன்.நீ
+91- 7200563961
rajan.sumikutty@gmail.com