
‘‘தேவையில்லாத ஆசை அதிகமாயிடுச்சு...!’’
முதலில் நமக்கு டீசலைக் கொடுத்தான்.
எதுக்குன்னா
டிராக்டர்ல ஊத்து;
மோட்டார் போட்டு தண்ணி எடு;
தானியம் பெருகும்”னு சொன்னான்.
இப்ப தானியத்தைக் கொடுன்னு நம்மட்ட கேட்கிறான்.
எதுக்குன்னா டீசல் தயார் பண்ணவாம். இதுக்கா உழைக்கிறோம்? வெளிநாட்டுப் பொருளை நம்பி மேலும் அந்த கருவிகளை கொண்டு நிலத்தையே கெட்டியாக்கிட்டோம்.
சோளம், கம்பு, தினை போன்ற தானியங்களை பயிர் செய்து சாப்பிட்டு நன்றாக இருந்தோம். ஆனால், இன்று விளையும் மக்காச்சோளம் பாதி கோழிக்கும், பன்னிக்கும், மாட்டுக்கும் தீவனமா போகுது.
நாம கோழியத் தின்னா சத்துன்னு நினைக்கிறோம். எதை எதையோ நாம ஆசைப்பட ஆரம்பிச்சுட்டோம்.
அமெரிக்கா போக ஆசை,
நிலாவுக்கு போக ஆசைன்னு தேவையில்லாத ஆசை அதிகமாயிடுச்சு...!
-‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ .கோ.நம்மாழ்வார்